![]() | வரமொன்று தா - நெஞ்சில் உரமென்று தா வஞ்சந்தனை வெல்லுந் திறமொன்று தா |
கொட்டுங்கொடுங் கோன்மை கொல்கின்ற போதும் - அதை முற்றும் எதிர்க்கின்ற மனமொன்று தா இன்னல் பலநூறு ஏற்கின்ற போதும் - உளம் சற்றும் சளைக்காத தினவொன்று தா வறுமை பிடித்தென்னை வருத்திட்ட போதும் - என் திறமை இருக்கென்ற உறுத்தொன்று தா எதையும் எதிர்கொண்டு போரிட்டு வெல்ல - என் இதயந் தயங்காத துணிவென்று தா உறவே உயிர்த்துரோகம் இழைத்தாலும் கூட - நான் எதற்குங் கலங்காத திடந்தன்னைத் தா நஞ்சை அமிழ்தென்று தந்தாலும் கூட - தெரிந்தும் அவர்க்காய் குடிக்கின்ற குணந்தன்னைத் தா காலம் குறைவாக வாழ்ந்தாலே போதும் - அதை வீணாய் கழிக்காத வினைதன்னைத் தா வீழும் உயிர் ஒன்றும் பல்லாண்டு வேண்டாம் - இவ் வையம் மறக்காத வாழ்வொன்று தா - தமிழ் வசந்தன் |