![]() |
||
அம்மாமாரே... அக்காமாரே... தங்கமாரே... மங்கமாரே... சொந்தக்கொடியே.. போராளி உசுரே... ஆறாத நெருப்பே... தன்மானப் பொறப்பே... சிங்களப் பிசாசுன்ன... கதறச் செதச்சப்ப... கையாளாகாம கைவிட்டுப் போனேனே அரசியல் களவாணிச் சூதாட்டச் சுழலுள்ள அப்பாவித் தமிழனா அகப்பட்டுப் போனேனே தோட்டாத் தொளச்செடுத்து... ரத்ததந் தெரிச்சோட - நீ விலியாலழுதப்ப வக்கத்துப் போனேனே... ஆறுதலுக்கும் ஆளத்து அநாதையாத் துடிச்சப்ப கொர கொடுக்க ஏலாம கதியத்துப் போனேனே |
அடிவயிறு எரியுதடி... இனங்காத்த மகராசி... ஈனப் பொறப்பா - நான் இருந்தத நெனக்கையில... வீரத் திருமகளே... சாகத் துணிஞ்சவளே... தியாகி உனக்கிந்த பாவியாலென்ன பயன்... சொல்லியழும் போது... சொர்க்கம் பார்த்திருப்ப... உனக்குன்னு அழுதப்ப ஒரு நாயும் வாரலையே... குண்டு தொளச்சுச்சோ... குழிக்குள்ள பொதச்சுச்சோ... ரத்தம் வெதச்சவளே... நெஞ்சு வலிக்குதடி... அரசும் தொறத்துச்சு... நாடும் தொறத்துச்சு... எங்கக் கதறலெல்லாம்... யாருக்குக் கேட்டுச்சு... தேர்தல் வருகேல... ஒவ்வொரு மொறையும் - இங்க ஓட்டுக்கு உனக்கொண்டு சூதாட்டம் நடந்துச்சு... |
அத்தோடு முடிஞ்சுச்சு... அத்தனை வாக்குகளும்... இப்போதும் உனக்கங்க... நலமென்ன நடந்துச்சு... உன்னோடு களங்காணும் கொடுப்பனையும் எனக்கில்ல இனிமேலும் உனக்காண ஒரு போதும் வழியில்ல... ஆனா உனக்கொன்ன உறுதியா ஒரப்பேனே... களத்தில நீ நின்ன வழி நின்னு உழைப்பேனே... புலியா புகுந்தாடி புதிரான தமிழீழம் அடையும் வர நானும் அசாரா திருப்பேனே அரசே வதச்சாலும்... ஆள் வெச்சு செதச்சாலும்... உசுரோட பொதச்சாலும்... ஊர்முன்ன எரிச்சாலும்... வழுவா திருப்பேன் - உன் வழியில் நடப்பேனே தொணையா இரு தாயே... துணிவோ டெழுகின்றேன் |
வீரப்புலிச் சகோதரிகளுக்கான கண்ணீர அஞ்சலியுடன், - தமிழ் வசந்தன் |