Jul 26, 2010

சுதந்திர தினச் சூளுரை



சாக்லேட் சாப்பிட்டதோடு
சரித்திரம் முடிந்துவிடாது
உணர்வில் ஏற்றி
உழைத்துப் பார்
உருக்கொள்ளும் நாடு

இலாபங்கண்டு வாழ்ந்தது போதும் - இது
லோகம் காணும் நேரம்
அள்ளித் தெளி - உன்
அறிவுச் செல்வத்தை

விழுந்துகிடக்கும்
முதுகெழும்பை
அடித்து நிமிர்த்தும்
ஆற்றல் நமக்குண்டு

கூடி முடிப்போம்
நாடு கொண்ட கடனை
இதுவே நம்
சுதந்திர தினச் சூளுரை

-தமிழ் வசந்தன்